ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

திருவள்ளூர்: திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டுக் குழு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து ஓணம் விழா கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் வழிகாட்டுதலில், துணைத் தலைவர் பொறியாளர் நவராஜ், துணைச் செயலர் தீனா மேற்பார்வையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் குகன் தலைமை தாங்கினார். டீன் ஜெயஸ்ரீ, துணை முதல்வர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. பூக்களால் நிறைந்த கோலங்களை ஆர்வத்துடன் மாணவர்கள் போட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் செ.சுதா செய்திருந்தனர்.

The post ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: