அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் வழியே பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே பணி தொடர்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அயலக தமிழர்களையும், முக்கிய முதலீட்டாளர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிறகு வரும் 12ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே பணி தொடர்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் (e-office) வழியே பணி தொடர்கிறது’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ- ஆபீஸ் வழியே பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: