பின்னர் அவரை, நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, ராமநாதபுரம் நீதிமன்றம் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, அவரின் மேலாளரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ரமேஷ் சங்கர்(55) என்பவரை, ராமநாதபுரம் தனிப்படை போலீசார் சென்னை எழும்பூரில் கைது செய்தனர். பின்னர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் (எண்-2) நீதிபதி நிலவேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post நடிகை கவுதமியிடம் நில மோசடி பாஜ பிரமுகரின் மேலாளர் கைது appeared first on Dinakaran.