அதில், சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரது பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சைதாப்பேட்டை குமரன் நகர் 1வது தெருவை சேர்ந்த கார்த்திக் (18) என்பதும், விஜயவாடாவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்வதும் தெரிந்தது.
அவரிடம் இருந்து 700 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.