விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் காரை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது காரில் மெத்தபட்டமைன் என்ற போதைப்பொருள் 30 பாக்கெட்டுகளில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், கார் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரில் கடத்திய போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.