இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் பலாரிஅங்லால் பாணி தனது செல்போன் பேசியபடி சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பலியாகியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான பைக் நம்பரை வைத்து தப்பிவிட்ட நபரை தேடி வருகின்றனர்.
அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் கூறியதாவது;
சாலையை கடந்து செல்லும்போது மக்கள் கவனமாக செல்லவேண்டும். செல்போனில் பேசியபடி சாலையை கடக்கக்கூடாது. தலைகவசம் அணிந்துதான் வாகனம் ஓட்டிச்செல்ல வேண்டும். இரவு, அதிகாலையில் மிகவும் கவனமாக பைக்கில் செல்லவேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்ல கூடாது. ஆனால் இவற்றை பொதுமக்கள் கடைபிடிப்பது கிடையாது. இதனால்தான் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post செல்போனில் பேசியபடி சாலையை கடந்த போது பைக் மோதி இளம்பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.