இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி

சென்னை: மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட தனது சொந்த ஊரான கரலப்பாக்கம் அரசு உயர்நிலைபள்ளி வாக்குச்சாவடியில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் நிருபர்களிடம் ரஞ்சித் கூறுகையில், ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்காகத்தான் வாக்கு செலுத்தி உள்ளேன். மதவாத சக்திகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவசியமான தேர்தல், இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் தேர்தல் இது’’ என்று தெரிவித்தார்.

The post இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: