செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி காவலை சென்னை முதன்மை நீதிமன்றம் ஏப்.22 வரை நீட்டித்தது. கடந்த முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: