மாறாக அவரது நீதிமன்றம் காவல் சுமார் ஓராண்டை நெருங்கி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூன் 4-ந்தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.இதன்மூலம் 36-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வங்கி சார்பில் அசல் ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்கும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
The post ஜுன் 4 வரை காவல் நீட்டிப்பு.. ஓராண்டை நெருங்கும் சிறை வாழ்க்கை.. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி புது மனு!! appeared first on Dinakaran.