வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. நிர்மலா தேவியின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து நிர்மலா தேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பகவதி அம்மாள், தண்டனை விவரத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
The post மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: குறைந்தபட்ச தண்டனை வழங்க நிர்மலா தேவி வேண்டுகோள்!! appeared first on Dinakaran.