×

நிதியுதவி வழங்கல்

கமுதி: கடலாடி அருகே கீழசெல்வனூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாட லண்டன் செல்ல உள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் சார்பில் கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான மாயகிருஷ்ணன் நிதியுதவி வழங்கினார். இவருடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை...