×

விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் சொரிமுத்து(30) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், சொரிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம், டாணா பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (30). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி, குழந்தையுடன் சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார்.

பின்னர், மனைவியைப் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, விருதுநகர் செல்வதற்காக விக்கிரமசிங்கபுரம், கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சொரிமுத்து நின்று கொண்டிருந்தாராம். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சொரிமுத்துவை அரிவாளால் வெட்டியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் பிரபு பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சமுத்திரக்கனி உள்ளிட்ட போலீசார், நிகழ்விடத்துக்கு வந்து சொரிமுத்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து கொலையில் ஈடுபட்டவர்கள், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Tags : Wickramasingapuram bus station ,Nella ,Sorimuthu ,Wickramasingapuram ,station ,Nella district ,Sorimudu ,
× RELATED பண்ருட்டி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது