×

மதுரை சிந்தாமணியை அப்பளம், வடகம் ஏற்றுமதி மையமாக அறிவிக்க வேண்டும்: சங்க ஆண்டு விழாவில் தீர்மானம்

 

மதுரை, ஆக. 4: தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் 14வது ஆண்டு விழா மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் க.திருமுருகன் தலைமை வகித்தார். மியான்மர் நாட்டின் கவுரவ தூதர் ரங்கநாதன்.ஜே சிறப்புத் தலைமை விருந்தினராகவும், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் முதன்மை விருந்தினராகவும் கலந்து கொண்டனர். விழாவில், அப்பள தொழிலுக்கான மூலப்பொருளான உளுந்தம் பருப்பை மானிய விலையில் வழங்கும் நிரந்தர திட்டத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மதுரை சிந்தாமணியை அப்பளம், வடகம், மோர் வத்தல் ஏற்றுமதி மையமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில், சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.திருமுருகனுக்கு `சாதனைச் செம்மல்’ விருதை சிறப்பு விருந்தினர் ரங்கநாதன்.ஜே, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் வழங்கினர். மாநிலச் செயலாளர் விஜிஸ், பொருளாளர் விஜயன், துணைத் தலைவர்கள் பால்கனி, செல்வம், மாநில இணைச் செயலாளர்கள் மாரிமுத்து, மணிகண்டன் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்தும் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags : Madurai Chintamani ,Madurai ,Tamil Nadu ,Appalam ,Vadagam, More Vattal Association ,Madurai Viraganur Ring Road ,K. Thirumurugan ,Myanmar ,Ranganathan.J. ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...