- வேளாண் தொழிலாளர்கள் சங்கம்
- யூனியன் அரசு
- ராஜபாளையம்
- இந்திய தொழிற்சங்க மையம்
- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்
- தமிழ்நாடு வேளாண்மை தொழிலாளர்
ராஜபாளையம், ஆக. 4: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து வரும் 10ம் தேதி, இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் இணைந்து மறியல் போராட்டத்தை மாநில அளவில் நடத்த உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சிஐடியு சார்பில், அய்யனாபுரத்தில் உள்ள ஜோதிபாசு நினைவகத்தில், ஒருங்கிணைப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிஐடியு குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகாலட்சுமி, போராட்டம் குறித்து விளக்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சோமசுந்தரம், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய விசைத்தறி சங்க செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட சிஐடியு ஒருங்கிணைப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
