- குஜ்லியம்பாறை
- குஜ்லியம்பாறை, ஆகா
- ரேம்
- திண்டிவநாதர், விழுப்புரம் மாவட்டம்
- கரிகலி
- மின் ஆலை
- குயிலியம்பாறை விஐபி
குஜிலியம்பாறை, ஆக. 4: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் ராம் (27). இவர் கரிக்காலி தனியார் சிமெண்ட் ஆலை பவர் பிளாண்டில் ஒப்பந்த அடிப்படையில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். குஜிலியம்பாறை விஐபி நகரில் வாடகை வீட்டில் தனியே வசித்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடிக்கு சென்று அங்கு கைப்பிடி சுற்றுச்சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தவறி வீட்டை ஒட்டியவாறு உள்ள தனியாருக்கு சொந்தமான கடை குடோன் காம்பவுண்டிற்குள் விழுந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கடை குடோனை ஊழியர்கள் திறந்து போது, காலில் ரத்தக்காயத்துடன் மயக்க நிலையில் ஒருவர் விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை சங்கர் (56) அளித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
