- Koraiyar
- முத்துப்பேட்டை
- மூத்த பொறியாளர்
- தஞ்சாவூர் பொதுப்பணித் துறை
- மாநில பொதுச் செயலாளர்
- தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம்
- கலியமூர்த்தி
- தில்லை விளாகம்
- திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டை,ஆக.2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கலியமூர்த்தி தஞ்சாவூர் பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தில்லைவிளாகம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும் இங்கு அதிகளவில் விவசாயிகளும் விவசாய நிலங்களும் உள்ளன. இந்த நெல் சாகுபடிக்கும், தென்னை சாகுபடிக்கும், நிலத்தடி நீருக்கும் பாசனமாக உள்ள இவ்வழியே செல்லும் கோரையாறு பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ளது இதனால் வாய்கால் முழுவதும் மேடு தட்டி தண்ணீர் சேமிப்பதிலும் வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அதேபோல் இந்த பாசன வாய்க்காலில் கதவணை இல்லாததால் வரும் நீரை சேமிக்க முடியாமல் சென்று விடுகிறது. அதனால் தற்போது உள்ள வரட்சியான சூழலில் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பல மடங்கு கீழே சென்றுவிட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் மட்டுமின்றி வேறு தேவைக்கும் தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். அதனால் உடனடியாக நடப்பாண்டே இந்த பாசன வாய்க்காலை தூர் வாரி தர வேண்டும் அதேபோல் வரும் நீரை சேமிக்க கதவணை அமைத்து தர வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
