×

சிவகாசி அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்

 

சிவகாசி, ஆக. 3: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் – செங்கமலநாச்சியார்புரம் சாலையில், சிவகாசி தாசில்தார் ஜெயபாண்டி, திருத்தங்கல் வருவாய் ஆய்வாளர் சுபாராணி, விஏஓ சதீஷ்குமார் உட்பட வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர்களை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராவல் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்கள் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த ஒரு மண் அள்ளும் வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, அதிகாரிகளை பார்த்தவுடன் மேற்கண்ட வாகனங்களை நிறுத்தியவர்கள், அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் மண்டல துணை வட்டாட்சியர் செல்வபகவதி புகார் அளித்தார். அதன் பேரில் டிராக்டர் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Sivakasi, Aga ,Sivakasi Railway Station ,Chengamalanachiarpuram Road ,Dasildar Jayapandi ,Thiruthangal Revenue ,Subarani ,VAO Sathishkumar ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...