×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் ரூ.140.29 கோடி உண்டியல் காணிக்கை: 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலின்படி கடந்த ஜூலை மாதத்தில் உண்டியலில் ரூ.140.29 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். இதில் ஜூலை மாதத்தில் ஐந்து நாட்கள் உண்டியல் வருமானம் ரூ.5 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச தொகையாக ஜூலை 16 அன்று பக்தர்கள் உண்டியலில் ரூ.5.31 கோடி செலுத்தினர். அதேபோல் 10.58 லட்சம் பக்தர்கள் தங்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். விடுமுறை நாட்கள், சுப நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகியவற்றின் காரணமாக, ஜூலை மாதம் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Swami ,Tirumala ,
× RELATED கனமழையால் ஆறுகளில்...