×

புரவி எடுப்பு திருவிழா

சிங்கம்புணரி, ஆக.1: சிங்கம்புணரி அருகே அணியம்பட்டியில் அகத்தூர் அய்யனார் கோயில் ஆடி திருவிழா கடந்த புதன் கிழமை முதல் வெள்ளி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான நேற்று மாலை மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நேற்று புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

இதில் கோவில் அரண்மனை புரவிகள் இரண்டு மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள் 12 என 14 புரவிகள் புரவி பொட்டலில் பலூன், கண்ணாடி மாலைகள் புரவிகளுக்கு அணிவித்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் புரவிகளை சுமந்து கோயிலுக்கு சென்றனர். அங்கு கோயிலின் முன்பு சாமி ஆட்டத்துடன் ஆடுகள் பலியிட்டு எரிசோறு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அணியம்பட்டி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

 

Tags : of Sponsorship ,Singambunari ,Akatur Ayyanar Temple Audi Festival ,Adiyampatti ,Singampanari ,
× RELATED பஸ் மோதி தொழிலாளி பலி