×

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக.1: தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி விவசாய பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் மணப்பத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்டோர் கண்டன முழக்கம் எழுப்பினர். பின்னர் அனைவரும் கூட்டுறவு சங்க அலுவலரிடம் மனு அளித்தனர்.

 

Tags : Senthurai ,Ariyalur district ,Ariyalur ,Manapathur Primary Agricultural Cooperative Credit Society ,Senthurai, Ariyalur district ,TDP ,Tamil Nadu Lake ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...