பொன்னை அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

 

பொன்னை, ஆக.1: பொன்னை அருகே புகையிலை பொருட்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் மாநில எல்லை சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பைக்கில் 2 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.அவர் மேல்பாடி சிவபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியதும் ெதரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களாக ஆந்திராவில் இருந்து புகையிலை போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Related Stories: