வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற கடையின் உரிமம் ரத்து

 

பள்ளிகொண்டா, ஆக.1: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்பனை செய்த கடையின் உரிமத்தை இணை ஆணையர் அதிரடியாக ரத்து செய்தார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பிரசாத கடைகளில் தங்களுக்கு தேவையான பிரசாதங்களை வாங்கி செல்கின்றனர்.

Related Stories: