திண்டுக்கல் ஆக 1: திண்டுக்கல் திருச்சி ரோட்டில் ஜி.ஹெச் எதிரே தனியார் பள்ளி முன்பாக உள்ள கழிவுநீர் வாய்க்காலின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்புகள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளதால் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும், என பொதுமக்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் நகரின் முக்கிய ரோடான திருச்சி ரோட்டில் ஜிஹெச் எதிரே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல அமைக்கபட்ட வாய்க்காலில் சிமெண்ட் சிலாப்புகள் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளது. சில இடங்களில் சிமெண்ட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே நீண்டு கொண்டுள்ளது.
