- திண்டுக்கல்
- திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி மின்சார வாரியம்
- தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம்
- மாவட்ட செயலாளர்
- அழகர்சாமி…
திண்டுக்கல் ஆக. 1: திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார். இதில் பொதுச் செயலாளர் சரவணன், மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆண்டுகள் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1998 முதல் 2008 ல் விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று பணி ஆணை வைத்திருக்கும், 6788 நபர்களுக்கு நிலுவைத் தொகையுடன் பணி ஆணை வழங்க வேண்டும். தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அனல் மின், நீர் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
