×

வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவக்கம்

 

திண்டுக்கல் ஆக 1: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஆக.30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. என கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது, ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான சுய கணக்கெடுப்பு நேற்று நிறைவு பெற்றது. எனவே, சுய கணக்கெடுப்பில் பதிவேற்றம் செய்யாத பொது மக்கள் அனைவரும், இன்று முதல் ஆக.30ம் தேதி நடைபெறும், வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. சுய கணக்கெடுப்பில் பதிவு செய்திருந்தால், அதற்கான ID எண்ணை தெரிவித்து, தங்களது வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை உறுதி செய்யலாம்.

 

Tags : Dindigul ,Dindigul district ,Collector ,Durga Murthy ,Dindigul… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...