×

அதிகாரிகள் அலட்சியம்; மின்வாரியத்தால் வெட்டப்பட்ட மரத்தால் இடையூறு: மாணவர்கள் அவதி

 

தஞ்சாவூர், ஜூலை 31: அதிராம்பட்டினத்தில் மின்வாரியத்தால் வெட்டப்பட்ட மரம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக கடந்த 28ம் தேதி மின்சாரா கம்பிக்கு இடையூறு செய்யும் மரம் வெட்டப்பட்டது ஆனால், வெட்டப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரத்துண்டுகள் சாலையோரத்தில் இருந்து இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் சாலையோரத்தில் கிடக்கும் மரக்கிளைகளால் அச்சத்துடனும் சிரமத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தால் வெட்டப்பட்ட மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சாலையோரத்தில் கிடக்கும் மரக்கிளைகள் மற்றும் மரத்துண்டுகளை உடனடியாக அகற்றி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Tags : Electricity Board ,Thanjavur ,Adhirampattinam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...