மதுரை, ஜூலை 30: மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோடு டிடி குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல் (23). இவரது வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த 2 டூவீலர்களை கடந்த ஜூலை 24ம் தேதி காலை முதல் காணவில்லை. இவற்றை யாரோ திருடி சென்றதாக கரிமேடு போலீசில் குமரவேல் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரீஸ் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் 2 டூவீலர்களையும் திருடியதாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
