தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்ட பிறகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு துளியும் சம்மதம் இல்லாத, என் மீது புகாரிலும், எப்ஐஆரிலும் என் பெயர் இல்லாத சூழ்நிலையில் விசாரணை என்ற பெயரில் என்து பெயரை இணைத்து, ஒரு வழக்கின் மூலமாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று தொடர்ந்து காலையும் மாலையும், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்.

இன்று காலை நான் தங்கி இருக்ககூடிய அறைக்கு காவல்துறை வருகை தந்து, சோதனை செய்ய வேண்டும் என்று என்னிடத்தில் சொன்னார்கள். அதற்கு நான் தாராளமாக சோதனை செய்யுங்கள் என்று எனது அறையை திறந்துவிட்டேன். அவர்கள் முழுமையாக எனது அறையை சோதனை செய்து, சோதனையில் எந்த வித ஆவணங்களும் இல்லை என்பதை எழுத்துபூர்வமாக கொடுத்து என்னிடமும் கையெழுத்து பெற்று அவர்களும் கையெழுத்திட்டு எனக்கும் ஒரு நகலை கொடுத்து விட்டு சென்றார்கள்.

இன்று(நேற்று) நான் 10.30 மணிக்கு கையெழுத்து போட்டு இருக்க வேண்டும். போலீசார் சோதனைக்கு வந்ததால் என்னால் போட முடியவில்லை. சோதனை முடிந்ததால் நான் கையெழுத்து போட வந்துள்ளேன். இதுவரை எங்கெங்கு சோதனை நடக்கிறது. யார் யார் இடங்களில் சோதனை நடக்கிறது என்று நான் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்த பிறகு சொல்கிறேன்.

டாஸ்மாக் சம்பந்தப்பட்ட வழக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு தற்போது உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தற்போது, தமிழ்நாடு காவல்துறை டாஸ்மாக் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அதை நான் எனது மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யப்படும். எனக்கு மட்டும் இல்லை.

கொஞ்ச நாளாகவே எங்களது மூத்த அமைச்சர்களாக உள்ள நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் மீதும், பல்வேறு தரப்பினர் மீதும் புகார்கள் பெறுவதில் இந்த அரசு முனைப்பாக இருக்கிறது. கொஞ்ச நாள் பார்ப்போம் இது எப்படி போகிறது என்று. என்னை பொருத்தவரைக்கும் மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை. அதனால எந்த வழக்காக இருந்தாலும் சரி, எந்த சோதனையாக இருந்தாலும் சரி நாங்கள் நேராக நின்று அதை தைரியாமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

 

Related Stories: