- ஓய்வூதியம் சங்கம்
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம்
- பனகல் கட்டிடம்
- மாவட்டத் தலைவர் எஸ். அய்யாக்கண்ணு
- மாவட்ட செயலாளர்
- சேதுராமன்…
தஞ்சாவூர், ஜூலை 28: மருத்துவக் காப்பீடு திட்டத்தை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சீனி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுராமன் வரவேற்றார். மாநில மகளிரணி அமைப்பாளர் ரேணுகா, மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் ஜெகதீசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களுக்கு பலன் தராத, மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
