தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம் மாநில உரிமை, மொழி மீது நடைபெறுகிற அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா, வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட வேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் பல்கலை துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழியின் மீது நடைபெறுகிற அத்துமீறல் மற்றும் அநீதி ஆகும். எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: