திருவண்ணாமலை, ஜூலை 24: திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மூன்று ஆண்டு சான்றிதழ் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்திருப்பதாவது:தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
