அரியலூர், ஜூலை 23: கோடை வெப்பத்தின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனல் காற்றுடன் கூடிய வெப்பம் நிலவியது.
