×

ஆசிரியர் பயிற்சிக்கு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சேர்க்கை நடைபெறுமா?

பாடாலூர், ஆக 1: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சியும், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பலதரப்பட்ட கல்வி சார் மற்றும் நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

தற்பொழுது 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் துணைத் தேர்வு எழுதிய மாணவ,மாணவியர் மற்றும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சேர்க்கை அனுமதி அளிக்குமாறு மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags : Badalur ,District Teacher Education and Training Institute ,Chennai-Trichy National Highway ,Badalur, Alathur taluka, Perambalur district ,
× RELATED மீன்சுருட்டி குரு பஞ்சாட்சர சித்தர்...