×

வழக்குகளின் தேக்கத்தை குறைக்க அனைத்து நீதிமன்றங்களும் விரிவுபடுத்தப்படும்: சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

 

சென்னை: வழக்குகளின் தேக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி. ஆர்.நிர்மல் குமார் உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் வி.ஆர்.கமலநாதன் வரவேற்று பேசினார். தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பார் அசோசியேசன் பல புகழ்பெற்ற வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் பார்த்த இடம்.

இந்த இடத்திற்கு என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன். சட்டத்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாகத்தில் சிக்கல்கள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களை விரிவு படுத்த வேண்டும், வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. முதல்வர் விஜய், நீதிமன்றங்களை எவ்வளவு விரிவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரிவுபடுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே, நீதிமன்றங்களை விரிவு படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நியாயமான நேர்மையான நீதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Law Minister ,Nirmal Kumar ,Chennai ,Tamil Nadu ,C.T. R. Nirmal Kumar ,Madras High Court ,Madras… ,
× RELATED மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க துறை...