×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை தாமதம் ஏன்? உயர் நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தனி விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க எண்ணமா? சிபிஐ விசாரணை தாமதம் ஏன்? ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் எந்த உத்தரவும் வராமல், அவரே துப்பாக்கியை எடுத்து 16 பேரையும் சுட்டாரா? சம்பவத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகையை உயர்த்தி வழங்க முடிவு உள்ளதா? என்று உயர் நீதிமன்றக் கிளை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : CBI ,Thoothukudi gunfire incident ,Madurai ,Tuthukudi gunfire ,CPI ,
× RELATED ஆளுநர் மாளிகையில் இருந்து கண்டிப்பான...