×

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய மரணம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியீடு

தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய மரணம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியானது. காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலம் மயங்கி விழும் 7 விநாடி சிசிடிவி காட்சி வெளியானது. சிறை அறைக்குள் மற்ற கைதிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அருணாச்சலம் சரிந்து விழுந்தார். தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலம் இறப்பு லாக் அப் மரணம் அல்ல என போலீசார் விளக்கமளித்துள்ளனர். அருணாச்சலத்தை மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர் வெளிப்புற காயங்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.

Tags : Thoothukudi ,Tenbagam Police Station ,Arunachalam ,Tuticorin ,
× RELATED மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க துறை...