மதுரை: தஞ்சை மாவட்டம் பேராவூரணி காய்கறி சந்தையை உடனே திறக்க உத்தரவிடக்கோரி பழனி என்பர் தொடர்ந்து வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. பேராவூரணி காய்கறி சந்தையை உடனடியாக திறக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பேராவூரணி சந்தையை திறக்க தவறும் பட்சத்தில் தஞ்சை ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.
