திண்டுக்கல், ஜூலை 23: திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ விஜய் மற்றும் போலீசார் சிறுமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தெப்பக்குளம் அருகே இருவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மனைவி ஓவியா (33), கோபிநாத் (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 12 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
