நாகை கடலோர பகுதிகளில் சாகர் காவாச் பயிற்சி ஒத்திகை

வேதாரண்யம், ஜூலை 23: நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடலோர பாதுகாப்பு படை கடற்படை ஆகியோர் இன்று, நாளை (23, 24தேதிகளில்) இணைந்து கூட்டு பயிற்சியாக சாகர் காவாச் பயிற்சி ஒத்திகை நடைபெறுகிறது. இந்த சோதனையில் மீனவர்கள் செல்லும் பைபர் மற்றும் நாட்டு படகுகள், விசைப்படகுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் கடலோர காவல் பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான படகுகள் மற்றும் நபர்கள், அன்னியர்யர்களின் நடமாட்டத்தையே சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடியில் ஈடுபடாத வேறு படகுகளின் நடமாட்டத்தையோ அச்சுறுத்தலான நடவடிக்கைகள் செயல்பாடுகளை, காணும் பொழுது உடனடியாக தகவலை ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கடலோர பாதுகாப்பு உதவி மையத்தின் 1093 என்று கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவித்திட வேண்டும்.

கடலில் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் எல்லா நாட்களிலும் அசல் பயோமெட்ரிக் அடையாள அட்டை மற்றும் ஆதர அட்டைகளையும் படகு தொடர்பான ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். மீன்பிடிப்பிற்காக செல்லும் படகுகள் பதிவு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். அவ்வப்போது சோதனை செய்திடும் அசல் ஆவணங்களை மீனவர்கள் காண்பிக்க வேண்டும். மேலும் இவ்அறிவிப்பு குறித்து அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து அவர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்புற மீனவர்களுக்கு தகவலை தெரிவித்துட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மீன்வளம் மற்றும் மீன் நலத்துறை உதவி இயக்குனர் சிவராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: