- பழனி
- சென்னை
- இந்து மதம்
- சமய
- அறக்கட்டளைகள்
- அமைச்சர்
- ரமேஷ்
- இந்து மதம் மானியங்கள் திணைக்களம்
- வருவாய் திணைக்களம்
- பழனி தண்டாயுதபானி சுவாமி
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்த குழு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய் இனங்கள் கணக்கில் வராத சொத்துகள் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என அறிக்கை தயார் செய்து விரைவாக அளிக்க உள்ளனர். தொடர்ந்து, அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
