×

ஆந்திராவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு : எண்ணிக்கை 19ஐ எட்டியது

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் பதிவாகியுள்ளது. நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 19ஐ எட்டியுள்ளது. அதிகபட்சமாக ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டூர், காக்கிநாடா மாவட்டங்களில் தலா 2 பேர் பாதிப்பு, விசாகப்பட்டினம், ஏலூர், நெல்லூர் மற்றும் என்.டி.ஆர் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய பாதிப்புகளுக்கு ‘ஒமிக்ரான் ஆர்.எஃப்.5’ வகை வைரஸ் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனாவால் இறந்த 4 பேர், தொற்று ஏற்பட்ட 25 நாட்களில் இறந்தனர். இருப்பினும், அவர்கள் நாள்பட்ட உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள். புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra ,AP ,R Kadapa district ,Guntur ,
× RELATED 2026-2027ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆக.5ம்...