×

திருச்சியில் பணம் திருடிய பெண் கைது

திருச்சி, ஜூலை 21: திருச்சியில் வீட்டில் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி திருவானைக்காவல் தம்புரான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (50). சமையல்காரர். ஜூலை 11ம் தேதி இரவு இவரது வீட்டில் தூங்க சென்றார். பின்னர் மறுநாள் விடியற்காலை எழுந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ராஜா ரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தி (30) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Tags : Trichy ,Raja ,Thamburan Street, Thiruvanaikkaval, Trichy ,
× RELATED புகையிலை விற்ற 6 பேர் கைது