×

புகையிலை விற்ற 6 பேர் கைது

திருச்சி, ஜூலை 21: திருச்சி கண்டோன்மென்ட், செசன் கோர்ட், பொன்மலை, கே.ேக நகர், உறையூர் பகுதிகளில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 19ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே புகையிலை விற்ற மணப்பாறை சேத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (64), பொன்னகர் அருகே புகையிலை விற்ற முசிறி ஆமுர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (32) மற்றும் பெரிய மிளகுபாறை அருகே புகையிலை விற்ற அப்பகுதியை சேர்ந்த கணேசன் (29), கொட்டப்பட்டு பகுதியில் புகையிலை விற்ற பொன்மலை மேலக்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த நாகராஜ் (42), மற்றும் உறையூர் லிங்கநகர் அருகே புகையிலை விற்ற மருதாண்டக்குறிச்சி ராமநாதநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

இதேபோன்று உடையான்பட்டி பகுதியில் புகையிலை விற்ற கொட்டப்பட்டு இந்திராநகரைச் சேர்ந்த சிவச்சந்திரன்(46) என்பவரை கே.கே நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த 1 கிலோ 297 கிராம் புகையிலையை பறிமுதல்செய்தனர்.

Tags : Trichy ,Trichy Cantonment ,Sessions Court ,Ponmalai ,K.Eka Nagar ,Uraiyur ,Bus ,
× RELATED திருச்சியில் பணம் திருடிய பெண் கைது