×

நிரம்பி வரும் கொளராம்பதி குளம் சூலூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சூலூர், ஜூலை 21: சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூரில் இருந்து நடுப்பாளையம் செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த்அ பாலத்தின் கீழ் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. இறந்தவருக்கு வயது சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்து ஒரு வாரம் இருக்கும் என போலீசார் தெரிவித்த நிலையில் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி இருந்தது. உடனடியாக அந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் சிதைந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் இவர் போதையில் மரணம் அடைந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : KOLRAMBATI POOL ,SOLOOR ,MIDPALAYAM ,Sulur ,Middalayam ,Goa ,Indah Bridge ,
× RELATED மாநகராட்சி அதிகாரிகள் தவெகவினருக்கு...