×

பயிர் நடவுக்கு டிராக்டர் உழவு தீவிரம்: 155 இடங்களை நிரப்ப கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று கலந்தாய்வு

கோவை, ஜூலை 21: கோவை அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 155 இடங்களை நிரப்ப கலந்தாய்வு இன்று நடக்கிறது. கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி இயற்பியல், வேதியியல், கணிதம், பி.காம் உள்ளிட்ட 23 இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், நடப்பாண்டில் 1,727 இடங்கள் நிரப்பப்பட இருந்தன. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு 33 ஆயிரத்து 753 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து, நடந்த மூன்று கட்ட கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன.

இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 20 சதவீத இடங்கள் அளித்த நிலையில், மொத்தம் 2,106 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது வரை நடந்து முடிந்த கலந்தாய்வின் மூலமாக மொத்தம் 1,861 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள 155 இடங்களை நிரப்ப இன்று (21-ம் தேதி) காலை 9 மணியளவில் நடக்கிறது. தற்போது, பி.சி, எம்பிசி பிரிவு மாணவர்களுக்கான இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று நடக்கும் கலந்தாய்வில் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை என்றால், அந்த இடங்கள் எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

எனவே, இன்று நடக்கும் கலந்தாய்வில் கோவை அரசு கலைக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் எனவும், பங்கேற்க வரும் மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் எனவும் கல்லூரியின் முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore Government Arts College ,Coimbatore ,
× RELATED மாநகராட்சி அதிகாரிகள் தவெகவினருக்கு...