×

கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

 

கோவை, ஜூலை 20: கோவை கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி (65) என்பவர் பூசாரியாக உள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி அவர் பூஜை முடித்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார். மறுநாள் காலை சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணசாமி இது குறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : KOWAI ,SHAKTI ,KALIAMMAN ,KOWAIKKALPALAYAM ,Narayanasamy ,
× RELATED மாநகராட்சி அதிகாரிகள் தவெகவினருக்கு...