×

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நீதி தாமதம்

 

சேலம், ஜூலை 20: மறைந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் 13வது ஆண்டு நினைவஞ்சலி நேற்று சேலம் மரவனேரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாஜ மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். ஊட்டி எம்எல்ஏ போஜராஜன் கலந்து கொண்டு, ஆடிட்டர் ரமேசின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், எம்எல்ஏ போஜராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் நீதி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. தாமதம் ஏற்பட்டால் தவறு செய்பவர்களுக்கு பயம் எப்படி ஏற்படும்?. ரமேஷ் கொலை வழக்கில் அவரது குடும்பத்தினர் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இனி வருங்காலத்தில், நீதிமன்றங்களில் காலதாமதம் இல்லாமல் நீதி வழங்க வேண்டும். தற்போது நடைபெறும் வரும் ஆட்சியை உடனடியாக தீர்மானக்க முடியாது. 6 மாதம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். பழனி கோயிலில் ரூ.100 கோடி சொத்து முறைகேடு விவகாரத்தில், பத்திரப்பதிவு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறோம். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தவெக அரசு மேல்முறையீடு சென்று இருப்பது செய்து தவறாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Auditor ,Ramesh ,Salem ,general secretary ,Bharatiya Janata Party ,Maravaneri, Salem ,BJP ,president ,Sasikumar ,MLA ,Bhojarajan… ,
× RELATED கன்னங்குறிச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது