×

கன்னங்குறிச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

சேலம், ஜூலை 21: சேலம் கன்னங்குறிச்சி சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி முருகன்(48). இவர் ஓமலூரில் டைலர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று கன்னங்குறிச்சி புதுஏரியில் உள்ள முனியப்பன் கோயில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த ஒருவர், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்ததும், பணம் கேட்டு மிரட்டியவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிவசக்திமுருகன், கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டியது பிரபல ரவுடி தீனதயாளன்(35) என்பது தெரியவந்தது. இவர் மீது 6 கொலை வழக்கு உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,Kannankurichi ,Salem ,Sivasakthi Murugan ,Swaminathapuram ,Kannankurichi, Salem ,Omalur ,Muniyappan temple ,Pudu Airi, Kannankurichi ,
× RELATED தம்மம்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற...