×

ஆடிப்பட்ட சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்

 

ஓமலூர், ஜூலை 18: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆடிப்பட்ட பருவ சூழ்நிலை, மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வதற்கு மிகவும் உகந்த தருணமாகும். சாகுபடியை துவக்கும் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தற்போது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மக்காச்சோளம், வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானிய பயிர்களையும், உளுந்து, பாசிப்பயறு, துவரை, நிலக்கடலை, எள், ஆமணக்கு மற்றும் பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

இதற்கான சான்று பெற்ற அரசு, வீரிய ஒட்டு மற்றும் உண்மை நிலை விதைகள் அனைத்தும் தனியார் மற்றும் அரசு விற்பனை நிலையங்களில் தயாராக உள்ளன. விவசாயிகள் சாகுபடிக்கு விதைகளை வாங்கும் போது, விதைப் பொட்டலங்களில் உள்ள பயிர் ரகம், விதைக் குவியல் எண், தரம் மற்றும் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கவேண்டும். மேலும், வாங்கியதற்கான விற்பனை பட்டியலை, கண்டிப்பாக கேட்டுப்பெற்று, அதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், விவசாயிகள் தரமான விதைகளை விதைத்து, அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Omalur ,Salem ,Namakkal ,Salem Seed Research Sub-Division ,
× RELATED தம்மம்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற...