×

தவிட்டுப்பாளையம் பகுதியில் ரூ. 20 லட்சத்தில கட்டப்பட்ட மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி

 

வேலாயுதம்பாளையம் ஜூலை 20: கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் வீதிக்கு கிழக்கில் ஆற்றங்கரையோரம் உள்ள குடிநீர் மேல் நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு பத்தாண்டு காலம் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டது என்பது குறித்து அரசு கவலைப்படாமல் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படவில்லை. அரசின் பணம் இதுபோன்று விரையம் செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எதற்காக இத்தனை ஆண்டு காலம் இதனை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என பதில் சொல்ல வேண்டிய அவசியம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் உண்டு.

எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமெனவும் எனவும் குடிநீர் வினியோகம் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பொழுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாகவே கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

 

Tags : Thavittpalayam ,Velayudhampalayam ,Mariamman Kovil Road ,Nanjai, Pugalur, Pugalur, Thavittpalayam ,Karur district ,
× RELATED அமராவதி அணையில் இருந்து உரியநீரை...